வெள்ளி, 19 செப்டம்பர், 2014

சத்தியமங்கலம் வாசிக்கிறது-2014



சத்தியமங்கலம் வாசிக்கிறது- 2014

அன்புடையீர்,
                        வணக்கம். லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

 


           கல்வி மேலாண்மைக்குழு தலைவர்,அரிமா K.லோகநாதன் அவர்கள் துவக்கவுரை & வரவேற்புரை நிகழ்த்திய காட்சி.....

திரு.K.ஜோசப் சகாயராஜ் அவர்கள்,தலைமையாசிரியர், நகராட்சி உயர்நிலை பள்ளி,ரங்கசமுத்திரம்(சத்தியமங்கலம்) . தலைமையுரை.....



திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு , வாழ்த்துரை நிகழ்த்திய காட்சி.......,



 திரு.S.ஜெயகாந்தன் M.C.A.,அவர்கள்,செயலாளர்,விடியல் சமூக சேவை இயக்கம்-புளியம்பட்டி அவர்கள் புத்தக வாசிப்போம் பற்றிய விளக்கவுரை நிகழ்த்திய காட்சி......

 ''சத்தியமங்கலம் வாசிக்கிறது'' நிகழ்ச்சியில் பங்கேற்ற சான்றோர் பெருமக்களில் சிலர்........


 சத்தியமங்கலம் வாசிக்கிறது - 
           1000 மாணவ மாணவியர்கள் புத்தகங்களை வாசித்தனர்
சத்தியமங்கலம் 18 செப்டெம்பர் 2014 புதன்கிழமை
விடியல் சமூகநல இயக்கம் மற்றும் சத்தியமங்கலம் கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை சார்பில் சத்தியமங்கலத்தில் முதல்முறையாக புத்தக திருவிழா அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 5 நாட்கள் கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
சத்தியமங்கலத்தில் முதல்முறையாக நடைபெற உள்ள புத்தக திருவிழா குறித்தும், புத்தகம் வாசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் ரங்கசமுத்திரம் நகராட்சி உயர்நிலை-துவக்க பள்ளியில் சத்தியமங்கலம் வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.ஜோசப் சகாயராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் எம்.செல்வி, கல்வி மேலாண்மை குழு தலைவர் K.லோகநாதன், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்க தலைவர்A.A. ராமசாமி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்க செயலாளர் C.பரமேஸ்வரன், விடியல் உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




                                  விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் பேசும்போது ஒவ்வொரு புத்தகமும் ஒரு நல்ல துணைவன். மனித மனதின் கோணலை நேர்படுத்துவது புத்தகங்கள் தான். ஒரே வாழ்கையில் நூறு வாழ்கை வாழ்ந்த அனுபவத்தை புத்தகம் தரும். ஒரு புத்தகம் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும். ஒவ்வொரு பிறவியிலும் ஒரு மனிதனோடு வாழ்ந்த அனுபவத்தை புத்தகம் தரும். நாம் தனிமையில் இருந்தாலும் புத்தகங்களோடு இருந்தால் தனிமையை தவுடு பொடியாக்கும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு. புத்தகங்களை தொடும் போது நாம் அனுபவத்தை தொடுகிறோம். உட்கார்ந்த இடத்தில் இருந்தே புத்தகத்தின் மூலம் நாம் உலகத்தை அறிந்து கொள்ளலாம்.மாணவ மாணவியர்கள் பாட புத்தகங்களை படிப்பதோடு பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும். ஏனெனில் புத்தகங்கள் மகத்தான மனிதர்களையும், அறிஞர்களையும், கவிஞர்களையும், சாதனையாளர்களையும் உருவாக்கி உள்ளது. அக்டோபர் மாதம் நடைபெற உள்ள புத்தக திருவிழாவில் 25 இகும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தின் பிரபலமான பதிப்பகங்கள் பங்குபெற உள்ளனர். இலட்சகணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.10% சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்கள் வழங்கபடும். இந்த அரிய வாய்ப்பினை மாணவ மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் நகராட்சி உயர்நிலை மற்றும் துவக்க பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஒரு மணிநேரம் புத்தகங்களை வாசித்தனர். இந்நிகழ்ச்சியில்கல்வி மேலாண்மைக் குழு தலைவர், நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் நகராட்சி துவக்க பள்ளி தலைமையாசிரியை ,இரு பள்ளி ஆசிரிய,ஆசிரியை பெருமக்கள்,மாணவ,மாணவிகள்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,விடியல் சமூக சேவை இயக்கம்-புளியம்பட்டி உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
                              தொடர்புக்கு,
                    அரிமா K.லோகநாதன், 
 லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் & 
வாகன புகை மாசு பரிசோதனை மையம்-
                  சத்தியமங்கலம்.
           +91 9443021196

திங்கள், 8 செப்டம்பர், 2014

பசுமைக்குடில்கள் என்றால் என்ன?

                                                  

அன்புடையீர்,
                வணக்கம். 
              லோகு வாகன புகை மாசு பரிசோதனை மையம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                         பசுமைக்குடில்கள் எனப்படுபவை தாவரங்கள் பயிரிடப்பட்டு, வெளிச் சூழலினால் பாதிக்கப்படாமல், பாதுகாப்பாக வளர்வதற்காக வெப்பநிலை மற்றும் ஈரப்பதனை ஒரு கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பதற்காக, கண்ணாடி அல்லது நெகிழியைக் கொண்டு அமைக்கப்படும் கட்டடங்கள் ஆகும். இவை குளிர் பிரதேசங்களில் தாவர வளர்ப்புக்கு இயலாத சூழலிலும் விவசாயம் செய்யப் பயன்படும் ஒரு கொட்டகை போன்ற அமைப்பாகும். இதன் கூரையானது கண்ணாடி போன்ற சூரிய ஒளி ஊடுருவக்கூடிய பொருளால் செய்ததாகும். ஒரு கண்ணாடி அறைக்குள் வளர்க்கப் படும் பச்சைத் தாவரங்கள், கரியமில வாயு மற்றும் மேற்சொன்ன வாயுக்களுடன் வினை பட்டுச் சூரியக் கதிர்களை அதிக அளவில் உறிஞ்சுவதால் அறையின் உட்புறம் வெளிப்புறத்தைக் காட்டிலும் அதிக வெப்பமடைகிறது. மேலும் இக்கூரையானது அதன் வழி புகும் சூரிய ஒளிக்கற்றையையும் அதனால் ஏற்படும் வெப்பத்தையும் வெளியேறாமல் தடுக்கும் அமைப்பினது. இதனால் வெளியில் வெகுவாகக் குளிராக இருந்தாலும், குடிலினுள் விவசாயத்திற்கு ஏற்ற ஒளிநிலையையும் வெப்பநிலையையும் பராமரிக்கலாம்.
குளிர் பிரதேசங்களில் பகலில் ஏற்படும் வெப்பம், இரவில் இல்லாமல் போய்விடுவதால்  தாவர வளர்ப்புக்கேற்ற பருவநிலை மாறுதல் அடைந்து  செடிகள் வளர்க்க இயலாமல் போகும். இதைத் தடுக்கவே இந்தக் கண்ணாடிக் குடில். அறைக்குள் பகலில் கண்ணாடி வழியே வரும் வெப்பம், இரவில் மிதமான வெப்பநிலை நிலவ, உள்ளே இருக்கும் வெப்பம் வெளியேறாமல் கண்ணாடிகள் தடுத்துக் காக்கின்றன. இதனால் அந்தச் செடிகள் தொடர்ந்து வளர முடியும். இதனைத் தான் பசுமைக் குடில் விளைவு என்கிறோம்.

பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன?

அன்புடையீர்,
                          வணக்கம். லோகு வாகன புகை மாசு பரிசோதனை மையம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன?ஏன் குறிப்பிட்ட வாயுக்களை மட்டும் பசுமை இல்ல வாயுக்கள் என்கிறோம்.? இதோ இணையத்தில் சேகரித்த விவரங்களை உங்களுக்காக தொகுத்து பதிவிட்டு உள்ளோம்.
பசுமை இல்ல வாயுக்கள் அப்படின்னா என்ன? கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை பசுமை இல்ல வாயுக்கள் ஆகும். பூமியை மிதமான சூடான வெப்பத்தில் வைத்திருக்கும் வாயுக்களே அவை. இந்த வாயுக்களால்தான் பூமியில் தாவரங்களும், உயிரினங்களும் தோன்றின. இல்லையெனில் பூமி வெறும் பனிக்கோளமாகவே இருந்திருக்கும். இந்த வாயுக்களால்தான் பூமியின் சராசரி வெப்பநிலை 33 டிகிரியாக உள்ளது.

இந்த வாயுக்களின் அளவு அதிகரித்தால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். அதனால் உயிரினங்கள் அழியும். துருவப்பகுதிகள் உருகத் துவங்கும். எங்கும் பனியே இல்லாமல் தண்ணீராக மாறும். நிலப்பகுதிகள் பெரும்பாலும் தண்ணீருக்குள் மூழ்கும். இந்த வாயுக்கள் அதிகரிக்க என்ன காரணம்? சுலபமான விடை மனிதனின் ஆதிக்கம்.

கீழே உள்ள 10 காரணிகள் தான் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிக்கக் காரணம்.

1. மின் உற்பத்தி நிலையங்கள் - 25%
நிலக்கரி மற்றும் எண்ணையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் உலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு.

2. காடுகள் அழிப்பு - 20%
விவசாயம் மற்றும் குடியேற்றங்களுக்காக காடுகள் அழிப்பு. இதனால் பசுமைஇல்ல வாயுக்கள் உறிஞ்சப்படாமல் பூமியில் இருக்கின்றன.

3. போக்குவரத்து - 13%
வாகனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு

4. எரிபொருள் உற்பத்தி - 6.3%
பெட்ரோல் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் வெளியிடும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு

5. உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் - 6%
பயிர்களுக்குப் போடப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் நைட்ரேட் ஆக்சைடை வெளியிடுகின்றன

6. பண்ணைகள் - 5%
பண்ணைகளில் உள்ள மாடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகள் வெளியிடும் மீத்தேன்

7. சிமெண்ட் உற்பத்தி - 4%
பெருகிவரும் குடியேற்றங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் சிமெண்ட் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறதி. இந்த ஆலைகளில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு முக்கிய காரணி.

8. விமானங்கள் - 3.5%
விமான எரிபொருளில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு

9. இரும்பு மற்றும் ஸ்டீல் உற்பத்தி - 3.2%
இந்த தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு

10. குப்பைகளும் கழிவுகளும் - 3%
குப்பைகளில் வெளிப்படும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு


இந்த வாயுக்களின் உற்பத்தியைக் குறைக்கத்தான் உலகநாடுகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றன. இவையெல்லாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள் ம்ட்டுமே முயன்று தீர்வு காண முடியும் என்றல்ல.


அன்றாட வாழ்வில் சாதாரண மக்களாகிய நாமும் பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கிறோம். தனிமனிதனாக நாமும் நம்மால் முயன்ற அளவு இவற்றைத் தவிர்க்க முடியும். சிறிய விசயங்கள்தான் மிகப்பெரும் பலன் தரும். ஒவ்வொரு வீட்டிலும் முயன்றால் சிறுதுளி பெரு வெள்ளம்.

1. சாதாரண விளக்குகளுக்குப் பதில் CFL விளக்குகளைப் பயன்படுத்துதல். இதனால் மின்சாரப் பயன்பாடு குறையும். உற்பத்தியும் அதிக அளவில் தேவையிருக்காது.

2. மின்சாரம் குறைவாகப் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, ஏசி ஆகியவை பயன்படுத்துதல். Energy Star முத்திரை 3க்கு மேல் இருப்பதை வாங்கலாம்.

3. அலுவலகக் கணினிகளை Stand byல் வைக்காமல் இயக்கத்தை முழுவதும் நிறுத்திவிடுதல்

4. ஏசிகளின் பில்டரை அடிக்கடி சுத்தம் செய்யலாம்.

5. தண்ணீர் சுடவைக்கும் இயந்திரங்களுக்குப் பதிலாக சூரிய ஒளி வெந்நீர் அடுப்புகளைப் பயன்படுத்தலாம். தண்ணீரை எப்போதும் 50 டிகிரிக்கு மேல் சுடவைக்க அவசியமில்லை.

6. துணிகள் அதிகம் இருந்தால் மட்டும் சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்

7. கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளைப் பயன்படுத்தலாம். பிக் ஷாப்பர் பைகள் மிகவும் வசதியானவை. கடைகளில் கொடுக்கும் பாலித்தீன் பைகளைத் தவிர்க்கலாம்.

8. குப்பைகளைப் பாலித்தீன் பைகளில் சேகரிக்கும் பழக்கத்தை மாற்றி குப்பைவாளிகளில் மட்டும் சேகரிக்கலாம். பாலித்தீன்களை எரிக்கும் போது வெளிவரும் வாயுக்கள் அதிக தீமை விளைவிப்பவை.

9. வாகன உபயோகத்தை முடிந்த அளவு குறைக்கலாம். Car pooling எனப்படும் முறையில் நண்பர்கள் சேர்ந்து ஒரு வாகனத்தை உபயோகிக்கலாம்.

10. வார இறுதி நாட்களில் பேருந்துகளை மட்டும் பயணத்துக்குப் பயன்படுத்தலாம். நெரிசலும் இருக்காது தானே??

11. சிக்னல்களில் வண்டியின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.

12. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மரம் வளர்க்கலாம். ஒரு மரம் தன் வாழ்நாளில் டன் கணக்கில் கார்பன் டை ஆக்சைடை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடுகிறது

இதுபோன்ற செயல்கள் டென்மார்க் நாட்டில் சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டன. டென்மார்க் தன் மின் உற்பத்திக்கு காற்றாலைகளையே பெரும்பாலும் பயன்ப்டுத்துகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சாலைகளில் வாகனம் ஓட்டத் தடையும் உள்ளது. டென்மார்க் உலகுக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது.அதனால் தான் தலைநகர் கோபன்ஹகனில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டது.

பிரிட்டன் போர்னியோ, நியூகினியா தீவிலுள்ள அடர்ந்த காடுகளை விலைக்கு வாங்கி அங்கு மரங்களை வெட்டத் தடைசெய்யும் படி அந்நாட்டு அரசாங்கங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.


நம் அரசாங்கமோ சாலை விரிவாக்கம், நான்கு வழிச் சாலை என இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டித்தள்ளிவிட்டது

தகவல் கோர்வை - இணையம்

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

பசுமை இல்ல வாயுக்கள்

அன்புடையீர், 
          வணக்கம். லோகு புகை பரிசோதனை மையம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
             பசுமை இல்ல வாயுக்கள் பற்றி காண்போம்.
           புவியில் அதிகமாகக் காணப்படும் பசுமை இல்ல வாயுக்கள் அல்லது  பைங்குடில் வாயுக்கள்  விவரம்
நீராவி , கரியமில வாயு  , மீத்தேன் வாயு(சாண வாயு) , நைட்ரஜன் ஆக்சைடு ,ஓசோன் , கார்பன் புளூரோ கார்பன்கள் ஆகியன ஆகும்.




மனிதர்களால் வெளியிடப்படும் கரியமில வாயுவின் அளவு நாடுகள் வாரியாக

நாடுகள் 1000 டன் கரியமில வாயு வெளியேற்றம் ஒவ்வொரு நொடி/நிமிடத்திற்கும் ஒவ்வொரு நபரும் வெளிவிடும் கரியமில வாயு (ஆண்டிற்கு)டன் அளவுகளில்
இந்தியா 20.9 நொடி 1.32
சீனா 5.2 நொடி 4.59
பாகிஸ்தான் 35.9 நிமிடம் 0.8
இலங்கை 4.2 நிமிடம் 0.26
ரஷ்யா 20 நொடி 11.21
ஜப்பான் 24.8 நொடி 10.1
சூடான் 48.6 நிமிடம் 0.27
நைஜீரியா 5.4 நிமிடம் 0.67
தென்னாப்பிரிக்கா 1.3 நிமிடம் 8.5
கென்யா 43.3 நிமிடம் 0.32
அமெரிக்கா 5.3 நிமிடம் 19.62
மெக்சிகோ 1.3நிமிடம் 3.97
கனடா 5.63நொடி 16.87
பொலிவியா 46.1நிமிடம் 1.23
ஆஸ்திரேலியா 1.3 நிமிடம் 18.59
ஜெர்மனி 35.8 நிமிடம் 10.69
இத்தாலி 1.1 நிமிடம் 8.39
லக்சம்பர்க் 43.4 நிமிடம் 24.92
இங்கிலாந்து 56.5 நொடி 9.15
ஐக்கிய அரபு நாடுகள் 3.8 நிமிடம் 30.2
சவூதி அரேபியா 1.4 நிமிடம் 13.56
அன்புடையீர்,
              வணக்கம். அவசர உதவி எண்கள் உங்களுக்காக,

          ரயில் பயணம் மேற்கொள்கிறீர்கள். பெட்டியில் மாணவர்கள் ரகளை செய்கிறார்கள். சமூக விரோதிகளால் தொல்லை ஏற்படுகிறது. இன்னும் பயணத்தில் பாதுகாப்பின்மையை உணருகிறீர்கள். இந்நிலையில் நீங்கள் புகாருக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் இவை:
  • தமிழக ரயில்வே போலீஸாரின் உதவிக்கு 9962502536, 99625500500 ஆகிய எண்களையும்,
  • மத்திய ரயில்வே பாதுகாப்பு படையின் உதவிக்கு 044-25353999 மற்றும் 9003161710 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
இடையூறு செய்பவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

எரிபொருட்களும் அமில மழையும்

அன்புடையீர்,
                        வணக்கம்.லோகு வாகன புகை மாசு பரிசோதனை மையம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
         
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
                      பூமியைத் தாண்டி புதிய குடியிருப்புகளைத் தேடி மனிதன் சிறகு விரித்துப் பறக்கும் நேரம் இது. கற்பனைகளை எல்லாம் நிஜமாக்கும் அறிவியல் சோதனைகள், அற்புதக் கண்டுபிடிப்புகள் என்று மனிதனின் சாதனைகள் கற்பனையே செய்ய முடியாதது. ஆனால், இந்த வளர்ச்சிகளின் மற்றொரு பக்கம் மனித வாழ்வுக்கு எமனாக மாறிவருவது கதிகலங்க வைக்கும் உண்மை. 
மின் உற்பத்தி, வாகன உற்பத்தி  ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படும் நிலக்கரி மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களால் வெளிப்படும் மாசுக்களான கார்பன் மோனாக்ஸைடு, சல்பர்-டை-ஆக்ஸைடு, நைட்டிரஜன் ஆக்ஸைடு போன்றவை பேராபத்தை விளைவிக்கக் கூடியவை. இந்த நச்சு வாயுக்கள் வான மண்டலத்தில் மேகங்களில் கலந்து வருகின்றன. இதனால், சில இடங்களில் அமில மழையும், இன்னும் சில இடங்களில் மிகக் குறைந்த அளவு மழையும் பெய்யும் ஆபத்து உண்டு; இதனால் இந்தியாவும் அதைச் சார்ந்த சில நாடுகளும் பாதிக்க வாய்ப்புண்டு!-“ என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். நச்சு வாயுக்களால் ஏற்பட்ட மேகத்தின் அளவு எவ்வளவு தெரியுமா?
                அமெரிக்க சைஸ் ஆகும்! 
இந்த கோதுமை நிற மேகம் தற்போது, இந்து மகா சமுத்திரத்தின் மீது மிதப்பதாய் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 
சில ஆண்டுகளுக்கு முன் கார்காலத்தில் இந்தியா, சீனா, தென் கிழக்கு ஆசியா போன்ற நாடுகளுக்கு மேலாக குடை விரித்திரிருந்த நச்சு மேகம் தற்போது சற்று நகர்ந்து அமில மழை   பெய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி பெய்யும் மழையால் கடல் வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு உண்டாகும். இந்த மேகங்கள் 10 விழுக்காடு சூரிய ஒளியைத் தடுத்துவிடுவதால்.. குறைந்த அளவு நீரே ஆவியாகும். அதனால், மழையின் அளவும் குறைந்துவிடும் 
இப்படி 99 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உருவாகியுள்ள நச்சு மேகம் விஞ்ஞானிகளை கவலைக்கு உள்ளாக்கி உள்ளது. 
மோட்டார் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் டீசல்தான்  இந்தப் பிரச்னைகளுக்கு மூலகாரணம்! பெட்ரோலுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் டீசல் 7 மடங்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. தரம் குறைந்த டீசலில் கந்தகம் மிகுந்திருக்கும். இதனால் அதிகமாக புகை வெளிப்படும். சென்டர் ஃபர் சைன்ஸ் அண்ட் என்விராண்மென்டின் (சி.எஸ்.இ) இயக்குனர் பேராசிரியர் வி.ராமநாதன், “இண்டியன் ஓஷன் எக்ஸ்பெரிமெண்ட்’ (இண்டோ எக்ஸ்) தலைமை விஞ்ஞானி ஏ.பி.மித்ரா ஆகியோர் நடத்திய ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 
                மேற்கு வங்கம், பீகார், கர்நாடகம் மற்றும் பல பகுதிகளில் அமில மழை பொழியும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நிலக்கரியைப் பயன்படுத்தும் ஆலைகளாலும், அனல் மின் நிலையங்களாலும் அதிக அளவு கந்தக நுண் துகள்கள் சுற்றுச் சூழலில் பரவுகின்றன. காற்றிலுள்ள ஈரப்பதத்துடன் கலந்து கந்தக அமிலமாக உருமாறுகின்றன. இப்படி வெளிப்படும் கந்தகத்தின் அளவு 2000 ஆம், ஆண்டில் 6,500 கிலோ டன்னிலிருந்து 2010 ஆம் ஆண்டுக்குள் 10,900 கிலோ டன்கள் வரை அதிகரிக்கும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளால் காற்றில் கலக்கும் கந்தகத்தின் அளவு 30 விழுக்காடு அதிகரிக்கும்! 
நீரில் கலந்திருக்கும் பி.ஹெச். அளவு (நீரில் கலந்திருக்கும் ஹைட்டிரஜன் அயனிகள் அளவு) 5.6 க்கும் கீழாக குறைந்துவிட்டால்… அதை அமில கலப்பு உள்ளதாகவே கருத முடியும். 
பெங்களுரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் ஓர் ஆய்வில் நிபுணர் குழுவாக இணைந்து 1996-1998 இடைப்பட்ட காலத்தில் நகரின் பத்து இடங்களில் 561 மழை நீர் மாதிரிகளை (சாம்பிள்ஸ்) சேகரித்து சோதித்தார்கள். அப்போது, சராசரியாக பி.ஹெச்சின் அளவு 5.22 ஆக இருப்பதைக் கண்டார்கள். இதே நிலைமை நீடித்தால் 2012 க்கு மேல் பெங்களுரு மிக மோசமான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்கள்.                  இந்த அமில மழைக்கு உலக நாடுகள் ஒவ்வொன்றும் பொறுப்புடையவை என்று உறுதியுடன் கூறலாம்.

              1993 இல், மட்டும் அமெரிக்கா 90 மில்லியன் பவுண்ட் எடையுள்ள சல்பர்-டை-ஆக்ஸைடு, நைட்டிரஜன் ஆக்ஸைடுகளை வெளியேற்றியுள்ளது. இந்த நச்சுக் கழிவு காற்றில் கலந்து மேகக் கூட்டத்தை அடைந்ததையும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்து உறுதி செய்துள்ளனர். மழை வழியே பூமியை அடையும் இந்தக் கொடிய அமிலம் நீர் நிலைகளை மாசு அடையச் செய்து மீன் போன்ற கடல்வாழ் உயிரிகளை பேரழிவு ஏற்படுத்தும் என்று 30 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டும் எந்தவிதமான எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் இருப்பது வேதனையிலும் வேதனையாகும். ஆசியாவை எடுத்துக் கொண்டால் தற்போதுள்ள நிலை நீடித்தால்.. சல்பர் டை ஆக்ஸைடின் அளவு 1990 ஆம், ஆண்டுடன் ஒப்பிடும்போது, இன்னும் 10 ஆண்டுகளில் அது மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  ஆசியாவில் 1990 இல், காற்றில் கலந்த சல்பர்-டை – ஆக்ஸைடின் அளவு 34 மில்லியன்  மெட்ரிக் டன்கள்!
தென் கிழக்கு சீனா, கிழக்கு இந்தியா, தாய்லாந்து, கொரியா போன்ற நாடுகளில் இந்தப் பிரச்சனை அதி தீவிரமாக உருவெடுக்கும் என்று ‘வொர்ல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட்,’ ‘யு.என்.டி.பி’, ‘யு.என்.இ.பி’ மற்றும் ‘உலக வங்கி’ ஆகியவை பிரசுரித்த ‘வொர்ல்ட் ரிசோர்ஸ் (1998-1999) அறிக்கை தெரிவிக்கிறது. 
உண்மையில். மனித குலத்தைச் சுற்றியும் நச்சு வாயுக்களால் நிரப்ப்பட்ட மாசு மேகங்கள் சூழ்ந்துள்ள விபரீதம் இது. அதனால், இதற்கான தீர்வு மிக முக்கியமானது.

  • அதிகமான புகையை வெளியிடாத வண்ணம் வாகனங்களை வடிவமைக்க வேண்டும்.
  • வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
  • சுற்றுச்சூழலை கெடுக்காத எரிப்பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆனால், ஆசியாவில் 1990 இலிருந்து 2020 க்குள் எரிபொருள் பயன்பாடு மூன்று மடங்கு அதிகரிக்க இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
கடந்த முப்பதாண்டுகளில் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு மூன்று மடங்குக்கும் அதிகமாகப் பெருகியுள்ளது. இதன் காரணமாக ஏற்படும் நோய்களுக்காக இந்தியர்கள் ஆண்டுதோறும் ரூபாய் 4,500 கோடி செலவழிக்கிறார்கள் என்று உலக வங்கியின் அறிக்கைக் கூறுகிறது. மேலும், சுற்றுச்சூழல் மாசுவின் கோரப்பிடியில் சிக்கி ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருவர் பலியாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

காற்று, நீர், உணவு ஆகியவை உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளாகும். இந்த மூன்றும் மாசாகிப் போனதால்.. உலகமே மயானமாகிப்  போகும் விபரீதம் உண்டு. இது சம்பந்தமாக நீதி மன்றங்களின் கதவுகள் தட்டப்பட்டுள்ளன. நீதிபதிகளான வி.ஆர். கிருஷ்ணய்யர், ஜஸ்டீஸ் தேசாய் போன்றவர்கள் சட்ட ரீதியாக அரசுகள் மீது நிர்பந்தம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். 
1970 ஆம், ஆண்டு கணக்கின்படி காற்றை மாசுபடுத்துவதில் வாகனங்கள் 23 விழுக்காடு வகித்துள்ளன. நமது நாட்டிலுள்ள 22 நகரங்கள் சூழல்மாசு பூதத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கிறது. ஆனால், இது சம்பந்தமாக அது எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது.
மனித குலத்துக்குப் பேராபத்து விளைவிக்க உலகைச் சூழ்ந்துவரும் சூழல் கேட்டைப் பாதியாக குறைக்கலாம் என்று உலக வங்கி கூறினாலும், அதற்காக ஆகும்  செலவு சுமார் 3,87,000  கோடிகள்! இது வளர்முக நாடுகளின் தலையில் விழும் என்பது முக்கியமானது. 
இந்த அதி தீவிரமான நிலையை குபேர நாடுகள் உணர்ந்து இதில் தீவிர அக்கறை காட்ட வேண்டும். சூழல் மாசுவை நீக்கும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டும்.
இந்த பூமிப் பந்து அனைவருக்கும் பொதுவானது. வருங்காலச் சந்ததிகளுக்கும் சொந்தமானது என்ற உணர்வோடு நடந்து கொள்வது ஒவ்வொரு தனிநபர் மீதுள்ள பொறுப்பாகும்.