வெள்ளி, 19 செப்டம்பர், 2014

சத்தியமங்கலம் வாசிக்கிறது-2014



சத்தியமங்கலம் வாசிக்கிறது- 2014

அன்புடையீர்,
                        வணக்கம். லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

 


           கல்வி மேலாண்மைக்குழு தலைவர்,அரிமா K.லோகநாதன் அவர்கள் துவக்கவுரை & வரவேற்புரை நிகழ்த்திய காட்சி.....

திரு.K.ஜோசப் சகாயராஜ் அவர்கள்,தலைமையாசிரியர், நகராட்சி உயர்நிலை பள்ளி,ரங்கசமுத்திரம்(சத்தியமங்கலம்) . தலைமையுரை.....



திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு , வாழ்த்துரை நிகழ்த்திய காட்சி.......,



 திரு.S.ஜெயகாந்தன் M.C.A.,அவர்கள்,செயலாளர்,விடியல் சமூக சேவை இயக்கம்-புளியம்பட்டி அவர்கள் புத்தக வாசிப்போம் பற்றிய விளக்கவுரை நிகழ்த்திய காட்சி......

 ''சத்தியமங்கலம் வாசிக்கிறது'' நிகழ்ச்சியில் பங்கேற்ற சான்றோர் பெருமக்களில் சிலர்........


 சத்தியமங்கலம் வாசிக்கிறது - 
           1000 மாணவ மாணவியர்கள் புத்தகங்களை வாசித்தனர்
சத்தியமங்கலம் 18 செப்டெம்பர் 2014 புதன்கிழமை
விடியல் சமூகநல இயக்கம் மற்றும் சத்தியமங்கலம் கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை சார்பில் சத்தியமங்கலத்தில் முதல்முறையாக புத்தக திருவிழா அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 5 நாட்கள் கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
சத்தியமங்கலத்தில் முதல்முறையாக நடைபெற உள்ள புத்தக திருவிழா குறித்தும், புத்தகம் வாசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் ரங்கசமுத்திரம் நகராட்சி உயர்நிலை-துவக்க பள்ளியில் சத்தியமங்கலம் வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.ஜோசப் சகாயராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் எம்.செல்வி, கல்வி மேலாண்மை குழு தலைவர் K.லோகநாதன், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்க தலைவர்A.A. ராமசாமி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்க செயலாளர் C.பரமேஸ்வரன், விடியல் உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




                                  விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் பேசும்போது ஒவ்வொரு புத்தகமும் ஒரு நல்ல துணைவன். மனித மனதின் கோணலை நேர்படுத்துவது புத்தகங்கள் தான். ஒரே வாழ்கையில் நூறு வாழ்கை வாழ்ந்த அனுபவத்தை புத்தகம் தரும். ஒரு புத்தகம் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும். ஒவ்வொரு பிறவியிலும் ஒரு மனிதனோடு வாழ்ந்த அனுபவத்தை புத்தகம் தரும். நாம் தனிமையில் இருந்தாலும் புத்தகங்களோடு இருந்தால் தனிமையை தவுடு பொடியாக்கும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு. புத்தகங்களை தொடும் போது நாம் அனுபவத்தை தொடுகிறோம். உட்கார்ந்த இடத்தில் இருந்தே புத்தகத்தின் மூலம் நாம் உலகத்தை அறிந்து கொள்ளலாம்.மாணவ மாணவியர்கள் பாட புத்தகங்களை படிப்பதோடு பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும். ஏனெனில் புத்தகங்கள் மகத்தான மனிதர்களையும், அறிஞர்களையும், கவிஞர்களையும், சாதனையாளர்களையும் உருவாக்கி உள்ளது. அக்டோபர் மாதம் நடைபெற உள்ள புத்தக திருவிழாவில் 25 இகும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தின் பிரபலமான பதிப்பகங்கள் பங்குபெற உள்ளனர். இலட்சகணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.10% சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்கள் வழங்கபடும். இந்த அரிய வாய்ப்பினை மாணவ மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் நகராட்சி உயர்நிலை மற்றும் துவக்க பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஒரு மணிநேரம் புத்தகங்களை வாசித்தனர். இந்நிகழ்ச்சியில்கல்வி மேலாண்மைக் குழு தலைவர், நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் நகராட்சி துவக்க பள்ளி தலைமையாசிரியை ,இரு பள்ளி ஆசிரிய,ஆசிரியை பெருமக்கள்,மாணவ,மாணவிகள்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,விடியல் சமூக சேவை இயக்கம்-புளியம்பட்டி உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
                              தொடர்புக்கு,
                    அரிமா K.லோகநாதன், 
 லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் & 
வாகன புகை மாசு பரிசோதனை மையம்-
                  சத்தியமங்கலம்.
           +91 9443021196

திங்கள், 8 செப்டம்பர், 2014

பசுமைக்குடில்கள் என்றால் என்ன?

                                                  

அன்புடையீர்,
                வணக்கம். 
              லோகு வாகன புகை மாசு பரிசோதனை மையம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                         பசுமைக்குடில்கள் எனப்படுபவை தாவரங்கள் பயிரிடப்பட்டு, வெளிச் சூழலினால் பாதிக்கப்படாமல், பாதுகாப்பாக வளர்வதற்காக வெப்பநிலை மற்றும் ஈரப்பதனை ஒரு கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பதற்காக, கண்ணாடி அல்லது நெகிழியைக் கொண்டு அமைக்கப்படும் கட்டடங்கள் ஆகும். இவை குளிர் பிரதேசங்களில் தாவர வளர்ப்புக்கு இயலாத சூழலிலும் விவசாயம் செய்யப் பயன்படும் ஒரு கொட்டகை போன்ற அமைப்பாகும். இதன் கூரையானது கண்ணாடி போன்ற சூரிய ஒளி ஊடுருவக்கூடிய பொருளால் செய்ததாகும். ஒரு கண்ணாடி அறைக்குள் வளர்க்கப் படும் பச்சைத் தாவரங்கள், கரியமில வாயு மற்றும் மேற்சொன்ன வாயுக்களுடன் வினை பட்டுச் சூரியக் கதிர்களை அதிக அளவில் உறிஞ்சுவதால் அறையின் உட்புறம் வெளிப்புறத்தைக் காட்டிலும் அதிக வெப்பமடைகிறது. மேலும் இக்கூரையானது அதன் வழி புகும் சூரிய ஒளிக்கற்றையையும் அதனால் ஏற்படும் வெப்பத்தையும் வெளியேறாமல் தடுக்கும் அமைப்பினது. இதனால் வெளியில் வெகுவாகக் குளிராக இருந்தாலும், குடிலினுள் விவசாயத்திற்கு ஏற்ற ஒளிநிலையையும் வெப்பநிலையையும் பராமரிக்கலாம்.
குளிர் பிரதேசங்களில் பகலில் ஏற்படும் வெப்பம், இரவில் இல்லாமல் போய்விடுவதால்  தாவர வளர்ப்புக்கேற்ற பருவநிலை மாறுதல் அடைந்து  செடிகள் வளர்க்க இயலாமல் போகும். இதைத் தடுக்கவே இந்தக் கண்ணாடிக் குடில். அறைக்குள் பகலில் கண்ணாடி வழியே வரும் வெப்பம், இரவில் மிதமான வெப்பநிலை நிலவ, உள்ளே இருக்கும் வெப்பம் வெளியேறாமல் கண்ணாடிகள் தடுத்துக் காக்கின்றன. இதனால் அந்தச் செடிகள் தொடர்ந்து வளர முடியும். இதனைத் தான் பசுமைக் குடில் விளைவு என்கிறோம்.

பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன?

அன்புடையீர்,
                          வணக்கம். லோகு வாகன புகை மாசு பரிசோதனை மையம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன?ஏன் குறிப்பிட்ட வாயுக்களை மட்டும் பசுமை இல்ல வாயுக்கள் என்கிறோம்.? இதோ இணையத்தில் சேகரித்த விவரங்களை உங்களுக்காக தொகுத்து பதிவிட்டு உள்ளோம்.
பசுமை இல்ல வாயுக்கள் அப்படின்னா என்ன? கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை பசுமை இல்ல வாயுக்கள் ஆகும். பூமியை மிதமான சூடான வெப்பத்தில் வைத்திருக்கும் வாயுக்களே அவை. இந்த வாயுக்களால்தான் பூமியில் தாவரங்களும், உயிரினங்களும் தோன்றின. இல்லையெனில் பூமி வெறும் பனிக்கோளமாகவே இருந்திருக்கும். இந்த வாயுக்களால்தான் பூமியின் சராசரி வெப்பநிலை 33 டிகிரியாக உள்ளது.

இந்த வாயுக்களின் அளவு அதிகரித்தால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். அதனால் உயிரினங்கள் அழியும். துருவப்பகுதிகள் உருகத் துவங்கும். எங்கும் பனியே இல்லாமல் தண்ணீராக மாறும். நிலப்பகுதிகள் பெரும்பாலும் தண்ணீருக்குள் மூழ்கும். இந்த வாயுக்கள் அதிகரிக்க என்ன காரணம்? சுலபமான விடை மனிதனின் ஆதிக்கம்.

கீழே உள்ள 10 காரணிகள் தான் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிக்கக் காரணம்.

1. மின் உற்பத்தி நிலையங்கள் - 25%
நிலக்கரி மற்றும் எண்ணையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் உலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு.

2. காடுகள் அழிப்பு - 20%
விவசாயம் மற்றும் குடியேற்றங்களுக்காக காடுகள் அழிப்பு. இதனால் பசுமைஇல்ல வாயுக்கள் உறிஞ்சப்படாமல் பூமியில் இருக்கின்றன.

3. போக்குவரத்து - 13%
வாகனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு

4. எரிபொருள் உற்பத்தி - 6.3%
பெட்ரோல் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் வெளியிடும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு

5. உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் - 6%
பயிர்களுக்குப் போடப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் நைட்ரேட் ஆக்சைடை வெளியிடுகின்றன

6. பண்ணைகள் - 5%
பண்ணைகளில் உள்ள மாடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகள் வெளியிடும் மீத்தேன்

7. சிமெண்ட் உற்பத்தி - 4%
பெருகிவரும் குடியேற்றங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் சிமெண்ட் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறதி. இந்த ஆலைகளில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு முக்கிய காரணி.

8. விமானங்கள் - 3.5%
விமான எரிபொருளில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு

9. இரும்பு மற்றும் ஸ்டீல் உற்பத்தி - 3.2%
இந்த தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு

10. குப்பைகளும் கழிவுகளும் - 3%
குப்பைகளில் வெளிப்படும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு


இந்த வாயுக்களின் உற்பத்தியைக் குறைக்கத்தான் உலகநாடுகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றன. இவையெல்லாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள் ம்ட்டுமே முயன்று தீர்வு காண முடியும் என்றல்ல.


அன்றாட வாழ்வில் சாதாரண மக்களாகிய நாமும் பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கிறோம். தனிமனிதனாக நாமும் நம்மால் முயன்ற அளவு இவற்றைத் தவிர்க்க முடியும். சிறிய விசயங்கள்தான் மிகப்பெரும் பலன் தரும். ஒவ்வொரு வீட்டிலும் முயன்றால் சிறுதுளி பெரு வெள்ளம்.

1. சாதாரண விளக்குகளுக்குப் பதில் CFL விளக்குகளைப் பயன்படுத்துதல். இதனால் மின்சாரப் பயன்பாடு குறையும். உற்பத்தியும் அதிக அளவில் தேவையிருக்காது.

2. மின்சாரம் குறைவாகப் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, ஏசி ஆகியவை பயன்படுத்துதல். Energy Star முத்திரை 3க்கு மேல் இருப்பதை வாங்கலாம்.

3. அலுவலகக் கணினிகளை Stand byல் வைக்காமல் இயக்கத்தை முழுவதும் நிறுத்திவிடுதல்

4. ஏசிகளின் பில்டரை அடிக்கடி சுத்தம் செய்யலாம்.

5. தண்ணீர் சுடவைக்கும் இயந்திரங்களுக்குப் பதிலாக சூரிய ஒளி வெந்நீர் அடுப்புகளைப் பயன்படுத்தலாம். தண்ணீரை எப்போதும் 50 டிகிரிக்கு மேல் சுடவைக்க அவசியமில்லை.

6. துணிகள் அதிகம் இருந்தால் மட்டும் சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்

7. கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளைப் பயன்படுத்தலாம். பிக் ஷாப்பர் பைகள் மிகவும் வசதியானவை. கடைகளில் கொடுக்கும் பாலித்தீன் பைகளைத் தவிர்க்கலாம்.

8. குப்பைகளைப் பாலித்தீன் பைகளில் சேகரிக்கும் பழக்கத்தை மாற்றி குப்பைவாளிகளில் மட்டும் சேகரிக்கலாம். பாலித்தீன்களை எரிக்கும் போது வெளிவரும் வாயுக்கள் அதிக தீமை விளைவிப்பவை.

9. வாகன உபயோகத்தை முடிந்த அளவு குறைக்கலாம். Car pooling எனப்படும் முறையில் நண்பர்கள் சேர்ந்து ஒரு வாகனத்தை உபயோகிக்கலாம்.

10. வார இறுதி நாட்களில் பேருந்துகளை மட்டும் பயணத்துக்குப் பயன்படுத்தலாம். நெரிசலும் இருக்காது தானே??

11. சிக்னல்களில் வண்டியின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.

12. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மரம் வளர்க்கலாம். ஒரு மரம் தன் வாழ்நாளில் டன் கணக்கில் கார்பன் டை ஆக்சைடை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடுகிறது

இதுபோன்ற செயல்கள் டென்மார்க் நாட்டில் சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டன. டென்மார்க் தன் மின் உற்பத்திக்கு காற்றாலைகளையே பெரும்பாலும் பயன்ப்டுத்துகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சாலைகளில் வாகனம் ஓட்டத் தடையும் உள்ளது. டென்மார்க் உலகுக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது.அதனால் தான் தலைநகர் கோபன்ஹகனில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டது.

பிரிட்டன் போர்னியோ, நியூகினியா தீவிலுள்ள அடர்ந்த காடுகளை விலைக்கு வாங்கி அங்கு மரங்களை வெட்டத் தடைசெய்யும் படி அந்நாட்டு அரசாங்கங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.


நம் அரசாங்கமோ சாலை விரிவாக்கம், நான்கு வழிச் சாலை என இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டித்தள்ளிவிட்டது

தகவல் கோர்வை - இணையம்

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

பசுமை இல்ல வாயுக்கள்

அன்புடையீர், 
          வணக்கம். லோகு புகை பரிசோதனை மையம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
             பசுமை இல்ல வாயுக்கள் பற்றி காண்போம்.
           புவியில் அதிகமாகக் காணப்படும் பசுமை இல்ல வாயுக்கள் அல்லது  பைங்குடில் வாயுக்கள்  விவரம்
நீராவி , கரியமில வாயு  , மீத்தேன் வாயு(சாண வாயு) , நைட்ரஜன் ஆக்சைடு ,ஓசோன் , கார்பன் புளூரோ கார்பன்கள் ஆகியன ஆகும்.




மனிதர்களால் வெளியிடப்படும் கரியமில வாயுவின் அளவு நாடுகள் வாரியாக

நாடுகள் 1000 டன் கரியமில வாயு வெளியேற்றம் ஒவ்வொரு நொடி/நிமிடத்திற்கும் ஒவ்வொரு நபரும் வெளிவிடும் கரியமில வாயு (ஆண்டிற்கு)டன் அளவுகளில்
இந்தியா 20.9 நொடி 1.32
சீனா 5.2 நொடி 4.59
பாகிஸ்தான் 35.9 நிமிடம் 0.8
இலங்கை 4.2 நிமிடம் 0.26
ரஷ்யா 20 நொடி 11.21
ஜப்பான் 24.8 நொடி 10.1
சூடான் 48.6 நிமிடம் 0.27
நைஜீரியா 5.4 நிமிடம் 0.67
தென்னாப்பிரிக்கா 1.3 நிமிடம் 8.5
கென்யா 43.3 நிமிடம் 0.32
அமெரிக்கா 5.3 நிமிடம் 19.62
மெக்சிகோ 1.3நிமிடம் 3.97
கனடா 5.63நொடி 16.87
பொலிவியா 46.1நிமிடம் 1.23
ஆஸ்திரேலியா 1.3 நிமிடம் 18.59
ஜெர்மனி 35.8 நிமிடம் 10.69
இத்தாலி 1.1 நிமிடம் 8.39
லக்சம்பர்க் 43.4 நிமிடம் 24.92
இங்கிலாந்து 56.5 நொடி 9.15
ஐக்கிய அரபு நாடுகள் 3.8 நிமிடம் 30.2
சவூதி அரேபியா 1.4 நிமிடம் 13.56
அன்புடையீர்,
              வணக்கம். அவசர உதவி எண்கள் உங்களுக்காக,

          ரயில் பயணம் மேற்கொள்கிறீர்கள். பெட்டியில் மாணவர்கள் ரகளை செய்கிறார்கள். சமூக விரோதிகளால் தொல்லை ஏற்படுகிறது. இன்னும் பயணத்தில் பாதுகாப்பின்மையை உணருகிறீர்கள். இந்நிலையில் நீங்கள் புகாருக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் இவை:
  • தமிழக ரயில்வே போலீஸாரின் உதவிக்கு 9962502536, 99625500500 ஆகிய எண்களையும்,
  • மத்திய ரயில்வே பாதுகாப்பு படையின் உதவிக்கு 044-25353999 மற்றும் 9003161710 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
இடையூறு செய்பவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

எரிபொருட்களும் அமில மழையும்

அன்புடையீர்,
                        வணக்கம்.லோகு வாகன புகை மாசு பரிசோதனை மையம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
         
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
                      பூமியைத் தாண்டி புதிய குடியிருப்புகளைத் தேடி மனிதன் சிறகு விரித்துப் பறக்கும் நேரம் இது. கற்பனைகளை எல்லாம் நிஜமாக்கும் அறிவியல் சோதனைகள், அற்புதக் கண்டுபிடிப்புகள் என்று மனிதனின் சாதனைகள் கற்பனையே செய்ய முடியாதது. ஆனால், இந்த வளர்ச்சிகளின் மற்றொரு பக்கம் மனித வாழ்வுக்கு எமனாக மாறிவருவது கதிகலங்க வைக்கும் உண்மை. 
மின் உற்பத்தி, வாகன உற்பத்தி  ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படும் நிலக்கரி மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களால் வெளிப்படும் மாசுக்களான கார்பன் மோனாக்ஸைடு, சல்பர்-டை-ஆக்ஸைடு, நைட்டிரஜன் ஆக்ஸைடு போன்றவை பேராபத்தை விளைவிக்கக் கூடியவை. இந்த நச்சு வாயுக்கள் வான மண்டலத்தில் மேகங்களில் கலந்து வருகின்றன. இதனால், சில இடங்களில் அமில மழையும், இன்னும் சில இடங்களில் மிகக் குறைந்த அளவு மழையும் பெய்யும் ஆபத்து உண்டு; இதனால் இந்தியாவும் அதைச் சார்ந்த சில நாடுகளும் பாதிக்க வாய்ப்புண்டு!-“ என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். நச்சு வாயுக்களால் ஏற்பட்ட மேகத்தின் அளவு எவ்வளவு தெரியுமா?
                அமெரிக்க சைஸ் ஆகும்! 
இந்த கோதுமை நிற மேகம் தற்போது, இந்து மகா சமுத்திரத்தின் மீது மிதப்பதாய் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 
சில ஆண்டுகளுக்கு முன் கார்காலத்தில் இந்தியா, சீனா, தென் கிழக்கு ஆசியா போன்ற நாடுகளுக்கு மேலாக குடை விரித்திரிருந்த நச்சு மேகம் தற்போது சற்று நகர்ந்து அமில மழை   பெய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி பெய்யும் மழையால் கடல் வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு உண்டாகும். இந்த மேகங்கள் 10 விழுக்காடு சூரிய ஒளியைத் தடுத்துவிடுவதால்.. குறைந்த அளவு நீரே ஆவியாகும். அதனால், மழையின் அளவும் குறைந்துவிடும் 
இப்படி 99 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உருவாகியுள்ள நச்சு மேகம் விஞ்ஞானிகளை கவலைக்கு உள்ளாக்கி உள்ளது. 
மோட்டார் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் டீசல்தான்  இந்தப் பிரச்னைகளுக்கு மூலகாரணம்! பெட்ரோலுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் டீசல் 7 மடங்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. தரம் குறைந்த டீசலில் கந்தகம் மிகுந்திருக்கும். இதனால் அதிகமாக புகை வெளிப்படும். சென்டர் ஃபர் சைன்ஸ் அண்ட் என்விராண்மென்டின் (சி.எஸ்.இ) இயக்குனர் பேராசிரியர் வி.ராமநாதன், “இண்டியன் ஓஷன் எக்ஸ்பெரிமெண்ட்’ (இண்டோ எக்ஸ்) தலைமை விஞ்ஞானி ஏ.பி.மித்ரா ஆகியோர் நடத்திய ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 
                மேற்கு வங்கம், பீகார், கர்நாடகம் மற்றும் பல பகுதிகளில் அமில மழை பொழியும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நிலக்கரியைப் பயன்படுத்தும் ஆலைகளாலும், அனல் மின் நிலையங்களாலும் அதிக அளவு கந்தக நுண் துகள்கள் சுற்றுச் சூழலில் பரவுகின்றன. காற்றிலுள்ள ஈரப்பதத்துடன் கலந்து கந்தக அமிலமாக உருமாறுகின்றன. இப்படி வெளிப்படும் கந்தகத்தின் அளவு 2000 ஆம், ஆண்டில் 6,500 கிலோ டன்னிலிருந்து 2010 ஆம் ஆண்டுக்குள் 10,900 கிலோ டன்கள் வரை அதிகரிக்கும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளால் காற்றில் கலக்கும் கந்தகத்தின் அளவு 30 விழுக்காடு அதிகரிக்கும்! 
நீரில் கலந்திருக்கும் பி.ஹெச். அளவு (நீரில் கலந்திருக்கும் ஹைட்டிரஜன் அயனிகள் அளவு) 5.6 க்கும் கீழாக குறைந்துவிட்டால்… அதை அமில கலப்பு உள்ளதாகவே கருத முடியும். 
பெங்களுரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் ஓர் ஆய்வில் நிபுணர் குழுவாக இணைந்து 1996-1998 இடைப்பட்ட காலத்தில் நகரின் பத்து இடங்களில் 561 மழை நீர் மாதிரிகளை (சாம்பிள்ஸ்) சேகரித்து சோதித்தார்கள். அப்போது, சராசரியாக பி.ஹெச்சின் அளவு 5.22 ஆக இருப்பதைக் கண்டார்கள். இதே நிலைமை நீடித்தால் 2012 க்கு மேல் பெங்களுரு மிக மோசமான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்கள்.                  இந்த அமில மழைக்கு உலக நாடுகள் ஒவ்வொன்றும் பொறுப்புடையவை என்று உறுதியுடன் கூறலாம்.

              1993 இல், மட்டும் அமெரிக்கா 90 மில்லியன் பவுண்ட் எடையுள்ள சல்பர்-டை-ஆக்ஸைடு, நைட்டிரஜன் ஆக்ஸைடுகளை வெளியேற்றியுள்ளது. இந்த நச்சுக் கழிவு காற்றில் கலந்து மேகக் கூட்டத்தை அடைந்ததையும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்து உறுதி செய்துள்ளனர். மழை வழியே பூமியை அடையும் இந்தக் கொடிய அமிலம் நீர் நிலைகளை மாசு அடையச் செய்து மீன் போன்ற கடல்வாழ் உயிரிகளை பேரழிவு ஏற்படுத்தும் என்று 30 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டும் எந்தவிதமான எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் இருப்பது வேதனையிலும் வேதனையாகும். ஆசியாவை எடுத்துக் கொண்டால் தற்போதுள்ள நிலை நீடித்தால்.. சல்பர் டை ஆக்ஸைடின் அளவு 1990 ஆம், ஆண்டுடன் ஒப்பிடும்போது, இன்னும் 10 ஆண்டுகளில் அது மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  ஆசியாவில் 1990 இல், காற்றில் கலந்த சல்பர்-டை – ஆக்ஸைடின் அளவு 34 மில்லியன்  மெட்ரிக் டன்கள்!
தென் கிழக்கு சீனா, கிழக்கு இந்தியா, தாய்லாந்து, கொரியா போன்ற நாடுகளில் இந்தப் பிரச்சனை அதி தீவிரமாக உருவெடுக்கும் என்று ‘வொர்ல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட்,’ ‘யு.என்.டி.பி’, ‘யு.என்.இ.பி’ மற்றும் ‘உலக வங்கி’ ஆகியவை பிரசுரித்த ‘வொர்ல்ட் ரிசோர்ஸ் (1998-1999) அறிக்கை தெரிவிக்கிறது. 
உண்மையில். மனித குலத்தைச் சுற்றியும் நச்சு வாயுக்களால் நிரப்ப்பட்ட மாசு மேகங்கள் சூழ்ந்துள்ள விபரீதம் இது. அதனால், இதற்கான தீர்வு மிக முக்கியமானது.

  • அதிகமான புகையை வெளியிடாத வண்ணம் வாகனங்களை வடிவமைக்க வேண்டும்.
  • வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
  • சுற்றுச்சூழலை கெடுக்காத எரிப்பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆனால், ஆசியாவில் 1990 இலிருந்து 2020 க்குள் எரிபொருள் பயன்பாடு மூன்று மடங்கு அதிகரிக்க இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
கடந்த முப்பதாண்டுகளில் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு மூன்று மடங்குக்கும் அதிகமாகப் பெருகியுள்ளது. இதன் காரணமாக ஏற்படும் நோய்களுக்காக இந்தியர்கள் ஆண்டுதோறும் ரூபாய் 4,500 கோடி செலவழிக்கிறார்கள் என்று உலக வங்கியின் அறிக்கைக் கூறுகிறது. மேலும், சுற்றுச்சூழல் மாசுவின் கோரப்பிடியில் சிக்கி ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருவர் பலியாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

காற்று, நீர், உணவு ஆகியவை உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளாகும். இந்த மூன்றும் மாசாகிப் போனதால்.. உலகமே மயானமாகிப்  போகும் விபரீதம் உண்டு. இது சம்பந்தமாக நீதி மன்றங்களின் கதவுகள் தட்டப்பட்டுள்ளன. நீதிபதிகளான வி.ஆர். கிருஷ்ணய்யர், ஜஸ்டீஸ் தேசாய் போன்றவர்கள் சட்ட ரீதியாக அரசுகள் மீது நிர்பந்தம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். 
1970 ஆம், ஆண்டு கணக்கின்படி காற்றை மாசுபடுத்துவதில் வாகனங்கள் 23 விழுக்காடு வகித்துள்ளன. நமது நாட்டிலுள்ள 22 நகரங்கள் சூழல்மாசு பூதத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கிறது. ஆனால், இது சம்பந்தமாக அது எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது.
மனித குலத்துக்குப் பேராபத்து விளைவிக்க உலகைச் சூழ்ந்துவரும் சூழல் கேட்டைப் பாதியாக குறைக்கலாம் என்று உலக வங்கி கூறினாலும், அதற்காக ஆகும்  செலவு சுமார் 3,87,000  கோடிகள்! இது வளர்முக நாடுகளின் தலையில் விழும் என்பது முக்கியமானது. 
இந்த அதி தீவிரமான நிலையை குபேர நாடுகள் உணர்ந்து இதில் தீவிர அக்கறை காட்ட வேண்டும். சூழல் மாசுவை நீக்கும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டும்.
இந்த பூமிப் பந்து அனைவருக்கும் பொதுவானது. வருங்காலச் சந்ததிகளுக்கும் சொந்தமானது என்ற உணர்வோடு நடந்து கொள்வது ஒவ்வொரு தனிநபர் மீதுள்ள பொறுப்பாகும். 

மாசு பற்றிய வெளி நாட்டினரின் ஆய்வு.

அன்புடையீர்,
                    வணக்கம். லோகு வாகன புகை மாசு பரிசோதனை மையம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

             உலகளவில் இந்தியாவில் மட்டும் 200% வாகன உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகவும், தேவையோ, தேவையில்லையோ. வாகனம் வாங்குவது ,அதை உபயோகிப்பது என்பது அவசியமானது, கெளரவமானது என்று கற்பிக்கப்படுவதாய் ,அமெரிக்காவிலிருந்து வரும் வாகனங்கள் குறித்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.  
                  இரு சக்கர ,நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அதற்கான வர்ணங்களால் பூமிக்கு அதிக வெப்பம் உண்டாக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதன் காரணமாக ஓசோன் படலத்தில் ஓட்டைகளை உருவாக்குவதோடு ,தரைப்பகுதியில் காற்றோடு கலந்திருக்கும் ஓசோனோடு கலப்புற்று விஷத்தன்மை கொண்ட வாயுவாக மாறுவது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.                                                            தோட்டப்பயிர்களையும்,தோப்புகளையும், சாலையோர மரங்கள் ,பசுமைவெளிகளையும் ,காடுகளையும் அதிகளவு இது தாக்குகிறது.  
                     சமீபத்திய ஆராய்ச்சி , இதை மீண்டும் மீண்டும் நிரூபித்து உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பூமி மாசடைதல், வெப்பமுறுதல் என்பதற்கான பலவிதமான காரணங்கள் கண்டறியப்பட்டாலும், இவ்வாறான ஒரு காரணம் தற்போது முதல் முறையாக அறிவியல் உலகு கண்டறிந்து உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பூமியில் நிலவும் தட்ப வெப்ப நிலை, ஒரு நிச்சயமற்ற, குழப்பமான தன்மையை அடைவதாய் கூறுகிறார், டாக்டர் ரோட்ரிக்ஸ் என்ற ஓசோன் ஆய்வாளர். இதை அரசும் ,மக்களும், தனியார் நிறுவனங்களும், பயன்பாட்டு மையங்களும் சரியாகப் புரிந்துகொண்டு தகுந்த ,உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். இல்லையேல், மாபெரும் நாசத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறார்.
                                          குறைந்தளவு நேரமே, வளிமண்டலத்தில் ஜீவித்திருக்க கூடிய மாசு வாயுக்களான நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் அங்கக பொருட்களால் உருவாகும் வாயுக்கள், வளி மண்டலத்தை சூடேற்றுவதற்கு முக்கிய காரணமாய் அமைவதில்லை. அவற்றின் நேரடித் தாக்கம் குறைவே. ஆனால் அதன் உப விளைவு அபாயகரமானது. பசுமை குடில் வாயுக்களை உற்பத்தி செய்யும், மூலப் பொருட்களாகத் தன்னை மாற்றிக் கொள்கின்றன. இதனால், தாவரங்கள் ஒளிச் சேர்க்கையில் ஈடுபடும்போது, அதிகபட்ச கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொள்கிறது. அது பூமிக்குள் சென்று வேர்கள் மூலமாக வேர் முடிச்சுகளாக சேமிக்கப்படுகிறது. இது ஓசோனின் முன்னோடியாக செயல்பட்டு ,பல வேதிவினை மாற்றங்கள் அடைந்து, வளி மண்டலத்தை வெப்பமடையச் செய்வதால் ,பசுமை மாறா தாவரங்கள், மரங்கள் போன்றவை பலியாகின்றன
                  டாக்டர் பில் கோலின், தனது ஆராய்ச்சி முடிவில், யாரும் ஓசோன் மாசுபடும் என்பதையும், அது இவ்வாறான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க வில்லை. இது நம் மக்களின் ஆசை, அறியாமையின் விளைவு என்றும் கூறலாம் என்கிறார். இதைத் தவிர நைட்ரஜன் ஆக்ஸைடு (NOx), கார்பன் மோனாக்ஸைடு(Co), மற்றும் அங்கக பொருட்கள்(VOC) போன்றவையும் இதே அளவு விளைவை உற்பத்தி செய்யும்,தற்போதைய நிலவரப்படி ,பூமியின் வட பகுதி இதனால் அதிகளவு வெப்பமடைந்துள்ளது. ஆய்வாளர்கள் இது குறித்து பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஏனெனில் ,பல நாட்டு ஆய்வறிஞர்கள், இம் முடிவை முதலில் ஏற்கத் தயங்கினர். அவர்களுக்கு, "உறுதி செய்யும்" அடிப்படையில் பல கட்ட சோதனைகள் நடத்திக் காண்பிக்கப்பட்டது.
                               முதலில் பூமிக்குள் , மாசுபடுத்தப்பட்ட ஓசோன் வாயுவைச் செலுத்துகின்றனர். இதற்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. பூமிக்குள் நடக்கும் வேதி வினைகளைக் குறித்துக் கொள்கின்றனர். உண்மையில் " இயல்பாக நிகழ்வது", எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் உட்பட்டது அன்று என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சுழற்சி முறையில் கார்பனானது ,எவ்வாறு ஓசோனைப் பல நிலைகளில் பாதிக்கச் செய்கிறது, இது எந்த முறையில் தாவரங்கள், மரங்களை ,பசுமை அமைப்புகளைப் பாதிக்கின்றது என்பதை,தயார் செய்யப்பட்ட மாதிரி சோதனைக் கலன்கள் மூலம் சோதிக்கிறார்கள் பல்வேறு அழுத்தத்தில்,பல்வேறு தாவரங்கள் மீது இது பீய்ச்சப்படுகிறது, இதன் மூலம், கார்பன் டை ஆக்ஸைடு வளிமண்டலத்தில் உறிஞ்சப்பட்டு ,எந்தெந்த அளவீட்டில் ,பூமிக்குள் சேகரமாகி பாதிப்புக்கு உள்ளாக்குகிறது, என்பவற்றைக் குறித்துக் கொள்கிறார்கள். பின், மண் பரிசோதனை செய்யப்படுகிறது .பூமிக்கும், வளிமண்டலத்தில் படிமமாக இருக்கும் காற்றிற்க்கும் இடையே நடக்கும், கார்பன் பரிவர்த்தனை கணக்கிடப்படுகிறது. ஒரு வருடத்தில் , எவ்வளவு வாயு வெளியேற்றப்படுகிறது என்பது மிக முக்கியம்.  
               டாக்டர் கோலினின் ஆய்வுப்படி ,ஒவ்வொரு வாயுவின் தாக்கம் வெவ்வேறு அளவில் உள்ளது. உதாரணமாக கார்பன் டைஆக்ஸைடின் தாக்கம் வளிமண்டலத்தில் நீண்ட நாள் இருக்கும். ஓசோனின் தாக்கம் குறைந்த கால அளவே இருக்கும். இதைப் பல்வேறு கால கட்டங்களில் ஆய்வுக்கு உட்படுத்தும்போது, பல்வேறு வகையான தாக்கங்கள் உருவாகி இருப்பது தெரிய வருகிறது. அதாவது, பூமியின் மீதான தாக்குதலின் வேகம், பல்வேறு அளவீடுகளைக் கொண்டுள்ளது.
                                   மற்றுமொரு வாயுவான நைட்ரஜன் ஆக்ஸைடின் விளைவு, எல்லோரையும் ஆச்சரியத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. இதுநாள் வரை குளிரூட்டும் வாயுவாக நினைத்துக் கொண்டிருந்தது அறிவியல் உலகம். மீதேன் வாயுவால் ,வளிமண்டலத்தில் உண்டாக்கப்படும் சூடானது ,இதனால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதே சமயம் தாவரங்களையும், உணவுப்பயிர்களையும், மிகக் கொடூரமாகத் தாக்குவதை ,தற்போது தான் கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். வளிமண்டலத்தில் வாயுவைக் கட்டுப்டுத்தும் வாயுவாக, இது நாள் வரை எண்ணிக் கொண்டிருந்தது தவறு என்பது போல ,அதி வேகமாக சூடேற்றும் வாயுவாகவும் இது செயல்படுகிறது! இவ்வாறான வாயுக்களால், உருவாக்கப்படும் தாக்கத்தை ,ஒன்றும் அறியாத, பசுமை அமைப்புகள் சுமந்து, பூமியின் மீதான இதன் தாக்கத்தை ,30--40 சதவீதம் குறைக்கின்றன. இதனால், வீடுகளில் செடி கொடிகள் வளர்ப்பு, மரம் வளர்ப்பு, சாலையோர மரங்களைப் பேணிக்காத்தல் ,காடுவளர்ப்பு போன்றவை அத்தியாவசியமாகிறது. எந்த அறிவியல் அமைப்பாலும், தடுத்து நிறுத்த முடியாத பங்களிப்பை, இந்தப் பசுமை அமைப்புகள் இயற்கையாகவே தந்து நம்மைக் காக்கின்றன.
                             ஸ்பீல் ராபின்சன் என்ற ஆய்வாளர், இவ்வாறான மாசு அதிகபட்சமாக நிலக்கரி சுரங்கங்கள் மூலம், நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பு, நீராவி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளால் அதிகம் ஏற்படுகிறது என்கிறார். இதனால், மாசடையும் ஓசோன் வாயு ,சளி, ஆஸ்துமா, ஆண்மைக்குறைவு, சரும நோய்கள், போன்றவற்றிற்கு மூல காரணமாகிறது. வெளிநாடுகளில், மாசைக் கட்டுப்படுத்த ,கிராவி மெட்ரிக் இயந்திரம் உபயோகிக்கப்படுகிறது. இது 24 மணி நேரத்தில் உமிழப்படும், மாசு துகள்களை ஒன்று சேர்த்து, எடை போட்டு, குறிப்பிட்ட சில மணி நேரத்தில் அழிக்கின்றன. அதற்கு மாற்றாக நீண்ட புகை போக்கிகள் அமைத்து, அதில் லேசர் கதிர்கள் உமிழும் இயந்திரங்களைப் பொருத்தி, துகள்களை எரித்து ,அதை சில மாற்றங்களுக்கு உட்படுத்தி முற்றிலும் இல்லாமல் ஆக்குகின்றனர். பெரும் செலவு ஏற்படுத்தும் இவ்வாறான அமைப்புகள், எல்லோராலும் பொருத்தப்பட முடியுமா என்பது சந்தேகம்
              ஏழை மற்றும் வளரும் நாடுகள், இது தொடர்பான சட்ட திட்டங்களைக் கண்டு கொள்வதே இல்லை என்று புலம்புகிறது ஐநா நல அமைப்பு
                 குறிப்பாகக் சுரங்கங்களில் உற்பத்தியாகும் வாயுக்கள் குறித்து, தேவையான விழிப்புணர்வை அதன் உரிமையாளர்கள் கற்றுக் கொண்டு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தவிர, வாகன உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும், வர்ணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் கடுமையான விதிமுறைகளை ஏற்படுத்தி, தங்களின் உற்பத்தியால் ஏற்படும் இயற்கையின் மீதான பாதிப்பு குறையுமாறு பார்த்துக் கொள்வது நலம் பயக்கும். உபயோகிப்பாளர்களான நாமும் ,நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும், நம் நடவடிக்கைகளால் ,இயற்கைக்கு எந்த வித குந்தகமும் விளைவிக்காது என்பதை உறுதி செய்து கொண்டால் வருங்காலத்தைப் பயமின்றி வரவேற்கலாம்.

இயற்கையை சிதைக்கலாமா?

அன்புடையீர்,
                 வணக்கம். லோகு வாகன புகை மாசு பரிசோதனை மையம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

                         நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு… இந்த ஐந்தும்தான் பஞ்சபூதங்கள் என்கிறோம்.
          மனிதனின் வாழ்வுக்கான அடிப்படை ஆதாரத்தேவைகளும் இவைகள்தான்.
ஆனால்… இந்த பஞ்சபூதங்களின் இன்றைய நிலை என்ன?... நமக்கு அப்புறமான நமது எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் இந்த பஞ்சபூதங்களின் பங்கு என்னவாக இருக்கப்போகிறது?...

வேகமாய் மாறிவரும் நமது வாழ்க்கை முறைகளாலும் எதிர்காலத்தைப் பற்றிய கவலையில்லாத நமது அலட்சியப்போக்கினாலும் நாளைய தலைமுறைக்கு பாதுகாப்பாய் நாம் கைமாற்ற வேண்டிய நமது இயற்கையை எவ்வாறெல்லாம் சிதைத்துக்கொண்டிருக்கிறோம்… அதனாலாகும் விளைவுகள் என்னவாய் இருக்கக்கூடும்… அதைத் தவிர்ப்பதற்கான நமது கடமைகள் என்னென்ன… என்பதற்கான ஒரு சிறிய விழிப்புணர்ச்சிக்கட்டுரை மட்டுமே இது...

    விஸ்வரூபம் எடுத்த தொழில் மயமாக்கலினால் காற்றில் கலக்கும் நச்சுப் புகைகளை கட்டுப்படுத்துவது வேண்டுமானால் அரசாங்கத்தின் கைகளில் இருக்கலாம்... ஆனால் ஒரு தனிமனிதராக நாம் ஒவ்வொருவரும் இயற்கையை சிதைக்கும் வேலையை நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ என்னென்ன வழிகளில் செய்து கொண்டிருக்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

இயற்கையையும், எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தையும் நாம் சிதைத்துக்கொண்டிருப்பதில் முக்கிய பங்கு… நெகிழி அதாவது பிளாஷ்டிக் கழிவுகள்! அதிலும் கேரி பேக் என்று நாம் அழைக்கும் நமது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகிப்போன பாலித்தீன் பைகள்தான் இயற்கைக்கு எதிரான சவால்களின் தலையாய எமன்! காரணம் இவைகள் பல நூறு ஆண்டுகளானாலும் மட்கும் தன்மையற்றவை என்பதுதான்.

    ஒரு காலத்தில் கடைகளுக்குச்செல்லும் போது மக்கள் வீடுகளிலிருந்தே வாங்கும் பொருள்களுக்கேற்ப தேவையான பைகளை எடுத்துச்செல்வதுதான் வழக்கமாய் இருந்தது. ஆனால் இன்றைய நிலைமையில் கடைகளுக்குச் செல்லும் போது பைகளை எடுத்துச்செல்வது கவுரவக் குறைச்சலான காரியமாகவே பார்க்கப்படுகிறது.  இன்று பிளாஷ்டிக் பேக்குகள் இல்லாத குப்பைகளையும் குப்பை மேட்டையும் பார்ப்பதென்பது கனவிலும் நடக்காத காரியமாகிப்போனது. ஒவ்வொரு மாநாகராட்சிகளிலும் கையாளப்படும் குப்பைகளில் இன்று 60 சதவீதத்திற்கும் அதிகமாய் நிறைந்திருப்பது இந்த பிளாஷ்டிக்கழிவுகள்தான்.....
 
           இந்தியாவில் இன்று சராசரி உபயோகம் வருடத்திற்கு ஒரு மனிதருக்கு ஒரு கிலோ பிளாஷ்டிக் பேக் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதே உலக அளவில் பார்க்கும் போது வருடத்திற்கு ஒரு மனிதரின் சராசரி உபயோகம் 18 கிலோ என்ற அதிர்ச்சித்தகவல் கிடைக்கிறது. பேப்பர் பேக்குகள் தயாரிக்க மரங்களை அழிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் பிளாஷ்டிக் பேக்குகள் தயாரிக்க இயற்கையில் எதையும் அழிக்கவேண்டியதில்லை என்றும் சில அறிவு ஜீவிகள் வாதிக்கின்றனர். பிளாஷ்டிக் பேக்குகளை உபயோகிப்பதில் தவறில்லை. ஆனால் அதைத் தகுந்த மறுசுழற்சிக்கு உட்படுத்தாமல்  அவரவர் இஷ்டத்துக்கு வரைமுறையின்றி வீசியெறிவதுதான் பிளாஷ்டிக் பேக்குகள் நமது இயற்கைக்கு மிகப்பெரிய சவாலாய் மாறிக்கொண்டிருப்பதற்கான முக்கிய காரணமாகும்.

இந்த பிளாஷ்டிக் கழிவுகளினால் உண்டாகும் சில முக்கிய பாதிப்புகள் –

1)   ஏற்கனவே தார்ச்சாலைகளாலும் கான்கிரீட் கட்டிடங்களாலும் சுருங்கிக்கொண்டிருக்கும் மண்பரப்பில் இந்த பிளாஷ்டிக்கழிவுகள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி நீக்கமற நிறையத் தொடங்கியிருக்கிறது. மண்ணுக்குள் புதையுறும் பிளாஷ்டிக்கழிவுகள் மழைக்காலத்தில் நிலத்தடிக்கு செல்லவேண்டிய நீருக்கு வழிவிடாமல் அதை நிலத்தின் மேற்பரப்பிலேயே வழிந்தோடச்செய்து நிலத்தடி நீர்மட்டத்திற்கு தடைசெய்கிறது. கிடைக்கும் கொஞ்ச நஞ்ச சந்துகளில் நிலத்தடிக்குள் நுழையும் மழைநீர் கூட இந்த பிளாஷ்டிக் கழிவுகளைத் தாண்டிச் செல்லும்போது நச்சுநீராய்த்தான் நிலத்தடி நீர்மட்டத்தை சென்றடைகிறது.

2)   இந்த பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகளில் கலக்கும்போது அதை ஏதோ உணவுக்கழிவாக நினைத்து உட்கொள்ளும் ஜீவராசிகள் செத்து மிதப்பதும் சாதாரண விஷயமாகிப்போனது. இது மட்டுமில்லாமல் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை தெரியாமல் உட்கொள்ளும் கால்நடைகளும் உயிரைவிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே  நடக்கிறது.  

3)   இதையெல்லாவற்றையும்விட மிகப்பெரிய பாதிப்பு... இந்த பிளாஷ்டிக் கழிவுகளை தீயிலிட்டு எரிப்பது. இது நம்நாட்டில் சர்வசாதாரணமாய் குப்பை மேடுகளிலும், சாலை ஓரங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பிளாஷ்டிக் கழிவுகளை தீயிலிட்டு எரிக்கும்போது உண்டாகும் புகையில் கலந்திருக்கும் நச்சு வாயுக்கள் பெரிய பெரிய தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையைவிட ஆபத்தானவை. 

4)   இந்த பிளாஸ்டிக் கழிவுகளினால் நிலத்தில் செடி கொடி மரங்கள் வேர்விட வழி தடை ஏற்பட்டு வளராமல் அழிகின்றன.



         பிளாஷ்டிக் பேக்குகளுக்கு அடுத்தபடியாய் இன்று மிகப்பெரிய சவாலாய் விளங்குவது ஈ-வேஸ்ட் எனப்படும் எலக்ட்ரானிக் கழிவுகள்தான். அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகள்தான் வல்லரசு நாடுகளின் எலக்ட்ரானிக் கழிவுகளுக்கான குப்பைத் தொட்டியாய் திகழ்கிறது. இந்த எலக்ட்ரானிக் குப்பைகள் நமக்கும் நம் சந்ததிகளுக்கும் விளைவிக்கப்போகும் ஆபத்தைப்பற்றி அறியாமலேயே நமது அரசியல்வாதிகளும் தங்கள் பாக்கெட்டை மட்டும் நிரப்பிக்கொண்டு இந்தியாவை ஆபத்தான குப்பைத்தொட்டியாய் மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
எலக்ட்ரானிக் குப்பைகளும், அதிலிருக்கும் நச்சுகளும், அவை விளைவிக்கும் நோய்களும் உங்கள் பார்வைக்காக சில...

1)   மெர்க்குரி – ஃபியூஸ் போனதும் நாம் சர்வசாதாரணமாய் தூக்கியெறியும் டயூப் லைட்டுகள் மற்றும் CFL பல்புகளிலிருப்பதுதான் இது. நமது உடல் நலத்திற்கு இது விளைவிக்கும் தீங்குகள் என்னென்ன தெரியுமா?... தொடு உணர்ச்சிக்குறைபாடு, நியாபக சக்தி குறைபாடு, சதைத்தளர்ச்சி. விலங்குகளுக்கு இது விளைவிக்கும் தீங்குகள்... மலட்டுத்தன்மை, வளர்ச்சிக்குறைபாடு, மரணம்!!!

2)   சல்ஃபர் – லெட்-ஆசிட் பேட்டரிகளில் இருப்பது – லிவர் டேமேஜ், கிட்னி டேமேஜ், ஹார்ட் டேமேஜ் மற்றும் கண் எரிச்சல் ஆகியவை இதனால் ஏற்படும் முக்கிய தீங்குகள்.

3)   கேட்மியம் – நிக்கல்-கேட்மியம் பேட்டரியில் இருப்பது. ஐரோப்பிய யூனியனில் மெடிக்கல் உபயோகத்திற்கு மட்டுமே நிக்கல்-கேட்மியம் பேட்டரிகள் அனுமதிக்கப்பட்டு மற்றவைகளுக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. இது கிட்னிக்கும், நுரையீரலுக்கும் மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கக்கூடியது.

4)   லெட் (Lead) – லெட்-ஆசிட் பேட்டரிகளிலும், CRT பிக்சர் டியூப் கொண்ட நமது பழையமாடல் டிவிக்களிலும், கம்ப்யூட்டர்களிலும் மிக அதிக அளவில் காணப்படும் இந்த லெட் நமது ஈரலுக்கும், கிட்னிக்கும் மட்டுமல்லாது நமது உடலின் நரம்பு சிஸ்டத்திற்கும் வெடிவைக்கும் எமன்.

5)   லித்தியம் – பல மாடல் பேட்டரிகளில் இருக்கும் இந்த லித்தியம் திறந்தவெளியில் எளிதில் தீப்பிடிக்க மற்றும் வெடிக்கக்கூடிய ஆபத்து நிறைந்தது.

6)   இவை மட்டுமில்லாமல் மேங்கனீஷ், ஆர்சானிக், சின்க், குரோமியம் போன்றவைகளும் ஈ-வேஸ்ட் குப்பைகளின் மற்ற எமன்களே!

சென்னையில் சேகரிக்கப்படும் ஒருநாளைய குப்பையின் எடை என்னவென்று தெரியுமா உங்களுக்கு... மயக்கம் போட்டு விடாதீர்கள்... கிட்டத்தட்ட 3500டன்!.

ஒரேயொரு நகரத்தின் நிலைமையே இப்படியென்றால் மொத்தமாகக் கூட்டிக்கழித்துப்பார்த்தால்... யப்போவ்!

இதேபோலத்தான்... நிலத்தில் இடப்படும் உரங்கள்... இயற்கை உரங்களைப்பற்றிய விழிப்புணர்வு இன்னமும் மக்களிடம் முழுமையாக ஏற்படுத்தப்படாமல் செயற்கை உரங்களை இஷ்டத்துக்குத் தூவி மண்ணில் மலட்டுத்தன்மை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்...

 தமிழகத்தின் நீர் ஆதாரங்களை 1950, 1975, 2012 என்ற விதத்தில் பிரித்து ஆராய்ந்தால் 2012 ல்  பெரும்பாலான ஏரிகளும், குளங்களும் இன்று ஆக்ரமிப்பு நிலங்களாக மாறிவிட்டது.

இன்றைய ஜீவநதிகளின் நிலைமை அதைவிட மோசம். சர்வசாதாரணமாய் அரசும் மக்களும் பாகுபாடின்றி நதிகளின் வயிற்றில் நச்சுகளைக் கொட்டிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் மிகப்பெரிய நீர்வழித்தடமாக வந்திருக்கவேண்டிய சென்னையின் கூவம் நதியின் இன்றைய நிலைமை மட்டுமே நமது அலட்சியங்களின் மிகச்சிறந்த அடையாளம்.  

எதிர்காலச் சந்ததியினரின் அடிப்படை வாழ்வாதார நதிகளை சிதைத்துக்கொண்டிருக்கும் இன்றைய நிகழ்வுகளுக்கு எதிர்காலம் கொடுக்கப்போகும் விலை மிக அதிகம். ஏற்கனவே தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலைமை வந்து பல வருடங்களாகிவிட்டது. இன்னும் எதிர்காலத்தில் தண்ணீரை இறக்குமதி செய்யப்போகும் நிலைமை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
 
நொய்யலாற்றில் ஓடும் சாயக்கழிவுகள்...
 
 
வைகை ஆற்றங்கரையின் இலட்சணம்...
 
 
தாமிரபரணியில் கலக்கும் சாக்கடை...
 
 
இது யமுனை நதியும் மாசடைந்துவிட்டது  என்றால் நம்புவீர்களா?..
 

சாக்கடைகளையும், குப்பைகளையும், சாயக்கழிவுகளையும், தோல் கழிவுகளையும் நதிகளில் கலந்து நமக்கு நாமே விதைத்துகொண்டிருக்கும் வினை,

அடுத்து... உலக வெப்பமயமாதல்.  இந்த வார்த்தையின் ஆரம்பம் நமது வீட்டில் எரியும் குண்டு பல்புகளிலும் உண்டு  வாகனப் புகைகளும், தொழிற்சாலை புகைகளும், காற்றை மாசுபடுத்துவதோடு மட்டுமில்லாமல் உலக வெப்பமயமாதலுக்கும் வித்திடுகிறது.

இன்று உலக வெப்பமயமாதல் என்ற நிகழ்வு பூமியின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கும் கடலின் நீர் மட்டத்தை கொஞ்ச கொஞ்சமாக அதிகரித்து நம்மை மூழ்கடிக்கப்போகும் வேலையை செவ்வனே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது.

பலவிதமான ஆய்வு முடிவுகளின்படி ஒரு வருடத்திற்கு சராசரியாய் 0.8 மி.மீ முதல் 3 மி.மீ வரை கடல் மட்டம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. விரைவில் அண்டார்டிகாவின் மொத்த பனிப்பாறைகளும் உருகி  அன்று பூமியில் நிலப்பரப்பை மூழ்கடித்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை.

 ஒரு தனிமனிதராக சுற்றுச்சூழலுக்கு நம்மால் செய்யமுடிவது (செய்யவேண்டும்)

1)   கடைகளுக்குச் செல்லும்போது கவுரவக் குறைச்சலாக எண்ணாமல் நாம் என்ன பொருள் வாங்கப்போகிறோமோ அதற்கேற்ப வீட்டிலிருந்தே பைகளை எடுத்துச்செல்ல பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

2)   எனது வருங்கால சந்ததிகளுக்காக எந்தவொரு சூழ்நிலைகளிலும் பிளாஸ்டிக் பேக்குகளை உபயோகிப்பதில்லை என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.

3)   நமது வீடுகளில் முடிந்தவரை குண்டுபல்புகள் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.

4)   பேட்டரிகள் உபயோகிக்கும்போது எப்போதும் ரீ-சார்ஜ் பேட்டரிகளை மட்டுமே உபயோகித்தால் அடிக்கடி பேட்டரிகளை குப்பைகளில் வீசுவதைத் தவிர்க்கலாம்.
 
5) யூஸ் & த்ரோ பிளாஸ்டிக் கப்புகளில் டீ மற்றும் குளர்பானம் குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி பேப்பர் கப் என்று கேட்கத் தொடங்குங்கள்.

6)   உங்களது வீடுகளிலிருக்கும் பழைய பொருட்களை குப்பையில் வீசாமல் மறு சுழற்சி செய்யுங்கள் அல்லது எடைக்குப் போட்டு காசாக்க பழக்கிக்கொள்ளுங்கள்.

7)   முடிந்தவரை உங்கள் வாகனங்களை சரியான தவணைகளில் சர்வீஸ் செய்து அதிலிருந்து வெளிப்படும் புகையின் அளவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.

8)   விவசாயிகள் ரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தலாம்.

9)   நமது குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் சீர்கேடுகளைப் பற்றிய விழிப்புணர்வை கற்றுக்கொடுங்கள்.